வெள்ளி, 30 டிசம்பர், 2011

அப்பாடா ஒரு வழியா ரொம்ப நாள் கழிச்சு ஸ்ரீலங்கா ஒரு டெஸ்ட் மாட்சுல
 வெற்றி வாகை சூடிட்டு..கடைசியா சுழல் மன்னன் முரளிஓய்வு பெற்ற போட்டில தான் இலங்கை வெற்றி பெற்றுச்சு..அதுக்கு அப்புறம் இலங்கைட நிலைமை 14 
 வருஷ வனவாசம் தான்..உலககோப்பை இறுதி போட்டில விளையாண்ட அணியா இதுனு சொல்லுற அளவு மோசமா இங்கிலாந்து,ஆஸ்திரேலியா,பாகிஸ்தான் அணிகளோட அடிமேல அடி வாங்குச்சு..அதோட தென் ஆப்பிகாவோட முதல் டெஸ்ட் போட்டிலயும் படு தோல்வி அடஞ்சுச்சு.

இருந்தாலும் நாங்க யாரு????சாம்பலில் முளைச்ச மக்கள் இல்லையா?விடுவோமா நாங்க ???முரளி அண்ணன் இல்லாமலும் எங்களக்கு வெற்றி பெற முடியும்னு ஒரு அளவுக்கு நிரூபிச்சு இருக்கோம்....ஸ்ரீலங்கா ரசிகரா இருக்குறது எவ்ளோ கஷ்டம்னு இருந்து பார்த்தா தான் தெரியும்,இங்க இருக்க இந்திய பசங்க அனுப்புற கிண்டல் குறும்செய்திகலக்கு பதில் சொல்லணும்.இந்தியா வெற்றி பெற்றுட்டா அதுக்கும் அப்பா,தம்பி னு வரிசையா வந்து அடிக்கிற மொக்கைய பொறுத்துக்கணும்..எல்லாத்துக்கும் மேல சொந்தகாரங்க ஸ்ரீலங்கா ரசிகர்னு சொன்னா
முறைச்சு பாப்பானுங்க...மொத்ததுல இலங்கை சிறப்ப வெற்றி பெற்ற நேரம் இந்தியா மோசமா படு தோல்வி அடைஞ்சது என்ன மாறி இலங்கை ரசிகர்களக்கு,முதுகு வலி வந்தவனுக்கு ஐஸ்வர்யா ராயே அயோடக்ஸ்
 தேச்சு விட்ட மாறி இருக்கு..
மொத்ததுல இந்த வாரம் காரசார கிரிக்கெட் விழாவா
ஆரம்பிச்சு இருக்கு..இந்தியா கலக்குத ..இல்ல இலங்கை கலக்குதா
???இல்ல வெள்ளைக்காரன் ரெண்டு பேருக்கும் அடிச்சு அனுப்புரானா னு பாப்போம் மக்களே ...............













 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக