ஞாயிறு, 1 ஜனவரி, 2012

Why this kolaveri di: அப்பாடா ஒரு வழியா ரொம்ப நாள் கழிச்சு ஸ்ரீலங்கா ஒரு...

Why this kolaveri di: அப்பாடா ஒரு வழியா ரொம்ப நாள் கழிச்சு ஸ்ரீலங்கா ஒரு...: அப்பாடா ஒரு வழியா ரொம்ப நாள் கழிச்சு ஸ்ரீலங்கா ஒரு டெஸ்ட் மாட்சுல வெற்றி வாகை சூடிட்டு..கடைசியா சுழல் மன்னன் முரளிஓய்வு பெற்ற போட்டில தான...

வெள்ளி, 30 டிசம்பர், 2011

அப்பாடா ஒரு வழியா ரொம்ப நாள் கழிச்சு ஸ்ரீலங்கா ஒரு டெஸ்ட் மாட்சுல
 வெற்றி வாகை சூடிட்டு..கடைசியா சுழல் மன்னன் முரளிஓய்வு பெற்ற போட்டில தான் இலங்கை வெற்றி பெற்றுச்சு..அதுக்கு அப்புறம் இலங்கைட நிலைமை 14 
 வருஷ வனவாசம் தான்..உலககோப்பை இறுதி போட்டில விளையாண்ட அணியா இதுனு சொல்லுற அளவு மோசமா இங்கிலாந்து,ஆஸ்திரேலியா,பாகிஸ்தான் அணிகளோட அடிமேல அடி வாங்குச்சு..அதோட தென் ஆப்பிகாவோட முதல் டெஸ்ட் போட்டிலயும் படு தோல்வி அடஞ்சுச்சு.

இருந்தாலும் நாங்க யாரு????சாம்பலில் முளைச்ச மக்கள் இல்லையா?விடுவோமா நாங்க ???முரளி அண்ணன் இல்லாமலும் எங்களக்கு வெற்றி பெற முடியும்னு ஒரு அளவுக்கு நிரூபிச்சு இருக்கோம்....ஸ்ரீலங்கா ரசிகரா இருக்குறது எவ்ளோ கஷ்டம்னு இருந்து பார்த்தா தான் தெரியும்,இங்க இருக்க இந்திய பசங்க அனுப்புற கிண்டல் குறும்செய்திகலக்கு பதில் சொல்லணும்.இந்தியா வெற்றி பெற்றுட்டா அதுக்கும் அப்பா,தம்பி னு வரிசையா வந்து அடிக்கிற மொக்கைய பொறுத்துக்கணும்..எல்லாத்துக்கும் மேல சொந்தகாரங்க ஸ்ரீலங்கா ரசிகர்னு சொன்னா
முறைச்சு பாப்பானுங்க...மொத்ததுல இலங்கை சிறப்ப வெற்றி பெற்ற நேரம் இந்தியா மோசமா படு தோல்வி அடைஞ்சது என்ன மாறி இலங்கை ரசிகர்களக்கு,முதுகு வலி வந்தவனுக்கு ஐஸ்வர்யா ராயே அயோடக்ஸ்
 தேச்சு விட்ட மாறி இருக்கு..
மொத்ததுல இந்த வாரம் காரசார கிரிக்கெட் விழாவா
ஆரம்பிச்சு இருக்கு..இந்தியா கலக்குத ..இல்ல இலங்கை கலக்குதா
???இல்ல வெள்ளைக்காரன் ரெண்டு பேருக்கும் அடிச்சு அனுப்புரானா னு பாப்போம் மக்களே ...............













 

வெள்ளி, 23 டிசம்பர், 2011

இலங்கை தமிழரின் இன்றைய நிலை

தமிழர் தாயகம் ...இன்று தந்தைக்கு பயந்து தப்பி வந்த விஜயனின் வாரிசுகளின் தாயகம் ஆகி இருக்கின்றது .....இலங்கையின் பூர்விக குடிகளையே தமிழ்நாட்டில் இருந்து தப்பி வந்தவர்கள் என கூறும்  கூட்டம் ஒரு பக்கம்,ஆயுதம் ஏந்தாத பொதுமக்களை முள்வெளி கம்பிகளக்குள் அடைத்து வைத்து அழகு பார்க்கும் "லங்கன் ஹிட்லர்" ஒரு பக்கம் என எங்கு திரும்பினும் இடியாப்ப சிக்கலாக இருக்கிறது தமிழர் வாழ்வு.

இந்தியாவின் சமஷ்டி முறையே தீர்வு என தமிழர்களின் பிரதிநிதியாக இருந்த விடுதலைபுலிகளும் ஒத்து கொண்ட செய்தி அனைவரும் அறிந்ததே,இதன் பொது ஆட்சி அதிகாரம் மட்டுபடுத்த பட்ட  அளவிலேயே தமில்றகலக்கு வழங்க படும்.எனின் தமிழர்களின் சுதந்திர வாழ்வு அங்கு உறுதி படுத்த பட்டு இருக்கும்.ஆயினும் சில மாதங்கள் முன்பு அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோட்டபாய கூறியதாவது,புலிகளை அழிதாயுற்று,இனி அதிகார பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை..இதன் மூலம் அவர் கூற வருவதாவது,இனி உங்களக்கு எங்க கைல தான் சாவு,எவன் நினச்சாலும் எங்க ஆர்மி உங்க வீட்டுல கலவேடுப்பான் ,உங்க வீட்டு பெண்களின் பாதுகாப்புக்கு நாங்க உத்திர வாதம் இல்லை என்பதே....யுத்தம் முடிந்து 2  வருடங்கள் ஆகியும் இன்னும் தமிழர் தாயக பகுதிகளில் இராணுவமே பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளது.போலீஸ் அதிகாரம் அமுல் படுத்த படவில்லை.இதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை ஹெய்டியில் பல்வேறு நாடுகளின் அமைதி படைகள் நடாத்திய அட்டூழியங்களை உதாரணமாக கொள்ளலாம்.


இந்தியாவின் எந்த இனத்தவரும் தமிழர்கள் அளவு பிற நாடுகளில் அவதியுற்று இருப்பார்களா என்பது சந்தேகமே,தமிழர்களின் தமிழ் ஈழ தாயக கனவு தகர்ந்து இருப்பினும் இதனை இவ்வாறே அடக்கி வைக்க முயற்சிப்பின்,ஈழ தமிழர் விவகாரம் மத்திய கிழக்கின் "பெரு வெடிப்பை" போல்    
வெடித்து சிதறும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை...

புதன், 21 டிசம்பர், 2011